பிளஸ்-2 தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 88 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகளே அதிகம்


பிளஸ்-2 தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 88 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகளே அதிகம்
x

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 88.45 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 1.93 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 120 பள்ளிகளை சேர்ந்த 5,360 மாணவர்கள், 7,419 மாணவிகள் என 12,779 பேர் தேர்வு எழுதினர். நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

இதில் 4,496 பேர் மாணவர்கள், 6,807 பேர் மாணவிகள் என 11,303 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 83.88 ஆகும். மாணவிகள் 91.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 88.45 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 86.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 1.93 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

100 சதவீதம் தேர்்ச்சி

இதேபோல் மாவட்ட அளவில் கடுங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலடி தில்லைவிளாகம் அரசு மேல்நிலைப்பள்ளி, கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசு பள்ளிகள், ஒரு சுயநிதி பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் 21 மெட்ரிக்் பள்ளிகள் என மொத்தம் 27 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் திருவாரூர் மாவட்டம் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் 30-வது இடத்தில் இருந்தது. தற்போது 26-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Next Story