திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 17 July 2020 10:45 PM GMT (Updated: 18 July 2020 1:10 AM GMT)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (B.P.E.S ) மூன்று வருட படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (B.P.Ed) இரண்டு வருட படிப்பு, முதுநிலை உடற்கல்வியியல் (M.P.Ed) இரண்டு வருட பட்டப்படிப்பு, (M.Phil) ஒரு வருட பாடப்பிரிவுகளும் உள்ளன. மேலும் ஆராய்ச்சி படிப்புகளாக Ph.D ( Full time @ Part time ) நடைபெறுகிறது.

இங்கு (B.P.E.S) மூன்று ஆண்டு பட்டப்படிப்பிற்கான மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படிப்பில் சேர பிளஸ்-2 மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் பங்குபெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவியரின் வயது வரம்பு 21 வயது இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். B.P.E.S படிப்பிற்கான விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இக்கல்லூரியில் B.P.Ed இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர இளநிலை பட்டப்படிப்பு உடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்குபெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டியில் பங்கு பெற்றிருந்தால் அந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

M.P.Ed இரண்டு ஆண்டு பட்டப்மேற்படிப்பில் சேர இளநிலை உடற்கல்வியியல் பயின்று இருக்க வேண்டும். B.P.Ed அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி வேண்டும். மாணவ-மாணவிகள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவருக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் B.P.Ed பயின்றவர்களுக்கு. M.P.Ed படிக்க கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

M.Phil ஒரு வருட பாடப்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. கல்வித்தகுதி M.P.Ed/ MPE மற்றும் அதற்கு இணையான பட்டமேற்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

இக்கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. மேலும் தேசிய தர மதிப்பீட்டுக்குழு மறுமதிப்பீட்டில் A சான்று வழங்கி உள்ளது.

உலக அளவிலான உள்விளையாட்டு அரங்கம், வெளிவிளையாட்டுகளுக்கு தேவையான விளையாட்டு மைதானங்கள், தரமான ஓட்டப்பாதை, தரம் வாய்ந்த உடற்கல்வி அறிவியல் ஆய்வகங்கள், தரமிக்க நூலக வசதி, திறமை வாய்ந்த பேராசிரியர் குழு, இருபாலரும் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதி, சிறந்த உடற்கல்வியியல் வல்லுநர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சிகள், நூறு சதவீத தேர்ச்சி மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பிற்கு தேவையான உதவி செய்து கொடுத்தல், மேலும் இங்கு பயிலும் மாணவர்களுக்கு NET மற்றும் SET தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்கள் பெற்று வருகின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது.

கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 100 சதவீத வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இக்கல்லூரி பற்றிய அனைத்து விவரங்கள், பட்டப்படிப்பிற்கான கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், கல்லூரி விதிமுறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகியவை www.drsacpe.org என்ற கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து (இணையத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை) கல்லூரி மின்னஞ்சலிற்கு drsacpe@aei.edu.in விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அலுவலகத்தின் 04639-245110, 220590 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை, கல்லூரி முதல்வர் செ.பெவின்சன் பேரின்பராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story