திருப்பூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 38 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 507 -ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 38 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 507 -ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 July 2020 11:06 PM GMT (Updated: 20 July 2020 11:06 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்தது

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் மூலம் மீண்டும் மாவட்டத்திற்குள் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இ-பாஸ் பெற்று திருப்பூர் மாவட்டத்திற்குள் வருகிறவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 4 ஆயிரத்து 965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு 75 வயது முதியவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

507 ஆக உயர்வு

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவினாசிபுதூரை சேர்ந்த 51 வயது ஆண், உடுமலை வேலன் நகரை சேர்ந்த 28 வயது ஆண், பாரதிநகரை சேர்ந்த 30 வயது பெண், 13 வயது சிறுவன், 18 வயது ஆண், 44 வயது ஆண், புதுப்பாளையம் தோப்புகாடு 31 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 33 வயது ஆண், 34 வயது ஆண், 35 வயது ஆண், மடத்துக்குளத்தை சேர்ந்த 18 வயது ஆண், உடுமலை எஸ்.என்.ஆர். நகரை சேர்ந்த 55 வயது பெண், ஸ்ரீமாரியம்மன் நகரை சேர்ந்த 26 வயது ஆண், திருப்பூர் வி.ஓ.சி.நகரை சேர்ந்த 41 வயது ஆண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், 17 வயது பெண், 39 வயது பெண், 10 வயது சிறுவன், 6 வயது சிறுமி, 65 வயது பெண், திருப்பூர் டி.எம்.சி. காலனியை சேர்ந்த 32 வயது ஆண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 42 வயது ஆண், செல்வராஜ் நகரை சேர்ந்த 60 வயது ஆண்.

பல்லடத்தை சேர்ந்த 40 வயது பெண், காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 36 வயது ஆண், முருகம்பாளையத்தை சேர்ந்த 67 வயது ஆண், வேலன் நகரை சேர்ந்த 67 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 44 வயது ஆண், நல்லூரை சேர்ந்த 39 வயது ஆண், கருகம்பாளையத்தை சேர்ந்த 27 வயது ஆண், அவினாசி வி.ஓ.சி. தெருவை சேர்ந்த 17 வயது ஆண், 21 வயது ஆண், காங்கேயம் ரோட்டை சேர்ந்த 24 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 65 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 47 வயது ஆண், பெரியதோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த 23 வயது ஆண், குன்னத்தூரை சேர்ந்த 50 வயது ஆண், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 43 வயது ஆண் ஆவர். இவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story