மராட்டிய மாநிலத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 267 பேர் பலியாகியுள்ளனர். அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,75,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,48,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,328 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 56.74 சதவிகிதமாக உள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,531 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,531 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story