நீலகிரியில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா - பாதிப்பு 802 ஆக உயர்வு


நீலகிரியில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா - பாதிப்பு 802 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 Aug 2020 10:30 PM GMT (Updated: 2 Aug 2020 3:09 AM GMT)

நீலகிரியில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் பாதிப்பு 802 ஆக உயர்ந்துள்ளது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதியானது. அதாவது ஒரநள்ளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த அதிகரட்டியை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், அட்டணையை சேர்ந்த 2 பெண்கள், ஒரு ஆண், குளிச்சோலையை சேர்ந்த ஒரு மூதாட்டி, கடநாட்டை சேர்ந்த ஒரு பெண், மதுரை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த சோலூரை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், குருத்துகுளியை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள் ஆகியோருக்கு வைரஸ் உறுதியானது.

கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த மகளுடன் தொடர்பில் இருந்த வில்லோ பாண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண், கோவை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒரு ஆண், வெளி மாவட்டங்களுக்கு சென்றுவந்த கொல்லிமலையை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், அருவங்காட்டை சேர்ந்த ஒரு ஆண், மாவனல்லாவை சேர்ந்த ஒரு பெண், குன்னூர் சந்திரா காலனியை சேர்ந்த ஒரு பெண், குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு சென்று வந்த ராஜாஜி நகரை சேர்ந்த ஒரு பெண், கரன்சியை சேர்ந்த ஒரு ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

மேட்டுப்பாளையத்துக்கு காய்கறி ஏற்றி சென்று வந்த ஜக்கனாரையை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி மஞ்சனக்கொரையை சேர்ந்த ஒரு ஆண், சேரம்பாடியை சேர்ந்த 2 பெண்கள் கூடலூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசித்து வந்த சளி வயல் பகுதியை சேர்ந்த ஒரு பெண், பெங்களூரில் இருந்து வருகை தந்த குன்னுரை சேர்ந்த ஒரு ஆண், மஞ்சூரில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த தொட்டக்கம்பையை சேர்ந்த ஒரு பெண், ஊட்டி எச்.பி.எப்.பகுதியை சேர்ந்த ஒரு ஆண், ராணுவ பயிற்சிக்காக வெளி மாவட்டத்தில் இருந்து வெலிங்டனுக்கு வருகை புரிந்த ஒரு ஆண், கேரளாவிலிருந்து வெலிங்டனுக்கு வந்த ஒரு ஆண், ஒரு பெண், ஒரு ஆண், மேல்கவ்வட்டியில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரியில் கொரோனா பாதிப்பு 802 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 650 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 150 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Next Story