கொரோனா பாதிப்பால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி


கொரோனா பாதிப்பால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2020 12:51 AM GMT (Updated: 7 Aug 2020 12:51 AM GMT)

கொரோனா பாதிப்பால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி.

பூந்தமல்லி,

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிமுனி (வயது 53). இவர், குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பாண்டிமுனி பரிதாபமாக இறந்தார்.


Next Story