தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி


தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 16 Aug 2020 10:00 PM GMT (Updated: 17 Aug 2020 1:10 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகள் அதிகஅளவு செய்யப்படுவதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் ஏற்கனவே 4 ஆயிரத்து 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர 194 பேர் குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 808 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண், 58 வயது ஆண், 75 வயது ஆண், 63 வயது ஆண், 70 வயது ஆண் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

Next Story