வேலூரில் நடந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை - அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி


வேலூரில் நடந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை - அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 22 Aug 2020 10:30 PM GMT (Updated: 22 Aug 2020 9:46 PM GMT)

வேலூரில் நடந்த முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

குடியாத்தம்,

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக ரூ.4 கோடியே 79 லட்சத்தில் 26 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் த.வேலழகன், பொதுப் பணித்துறை வேலூர் கோட்ட கட்டிடங்கள் பிரிவு செயற் பொறியாளர் சங்கரலிங்கம், குடியாத்தம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஜே.கே.என். பழனி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர் டி.சிவா, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கே.கேசவன், ஆர்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி கிறிஸ்டி வரவேற்றார்.

அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சிசில் தாமஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் அமுதா உள்பட பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கே.எம். பூபதி நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி. வீரமணி நிருபர்களிடம் கூறிய தாவது:-

2 நாட்களுக்கு முன்பு வேலூரில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி பங்கேற்ற கொரோனா தடுப்பு நடவடிக் கைகள் குறித்து அதிகாரிகள் மட்ட த்திலான ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுரு கனையும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கவில்லை, என அவர் கூறினார்.

இது, முதல்-அமைச்சரின் அலுவல் ஆய்வுகூட்டம். வேலூரில் நடந்த முதல்- அமைச்சரின் ஆய்வு கூட்டத் துக்கு எங்களுக்கும் அழைப்பு இல்லை. இதற்காக, அழைப் பிதழும் அடித்து அழைக்கப் படவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் நானாகவும், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.இது முழுக்க தமிழக முதல்-அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்ட அலுவல் ஆலோசனைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதை வைத்து தி.மு.க.வினர் அரசியல் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story