செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 406 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 406 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2020 12:42 AM GMT (Updated: 23 Aug 2020 12:42 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 406 பேர் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கீரப்பாக்கம், காயரம்பேடு, நெடுங்குன்றம், கொளப்பாக்கம், ஆலப்பாக்கம் போன்ற பகுதியில் 8 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கரிகாலன் தெருவில் வசிக்கும் 30 வயது வாலிபர், 56 வயது பெண் உள்பட 24 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி கற்பக அம்பாள் நகரில் வசிக்கும் 20, 23, 25, 28 வயதானவர்கள், 32 வயது வாலிபர் உள்பட 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 145 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 136 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 637 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 775 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 313 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் 22 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 ஆயிரத்து 851 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 368 பேர் இறந்துள்ளனர்.

Next Story