விக்கிரமங்கலம் அருகே, பள்ளத்தில் மொபட்டுடன் விழுந்த வாலிபர் சாவு - துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்


விக்கிரமங்கலம் அருகே, பள்ளத்தில் மொபட்டுடன் விழுந்த வாலிபர் சாவு - துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 23 Aug 2020 9:30 PM GMT (Updated: 23 Aug 2020 10:51 PM GMT)

விக்கிரமங்கலம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பள்ளத்தில் மொபட்டுடன் விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள உல்லியக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் தங்கதுரை(வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான செல்வகுமார்(31), இளம்வழுதி(28) ஆகியோரும் ஒரு மொபட்டில் குணமங்கத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மொபட்டை செல்வகுமார் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். மகிடர் கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, மொபட்டை திருப்ப முடியாததால் மொபட்டுடன் அவர்கள் 3 பேரும் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தனர். இதில் தங்கதுரை பலத்த காயமடைந்தார். செல்வகுமார் மற்றும் இளம்வழுதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் தங்கதுரை மற்றும் செல்வகுமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தங்கதுரை, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். செல்வகுமார் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story