பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது


பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2020 1:24 AM GMT (Updated: 30 Aug 2020 1:24 AM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை சாலையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் சோலை ஈஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன்னாலான அம்மன் சிலை, மைக்செட் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த பாண்டி (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்(43) ஆகியோர் கோவிலில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story