அதிகரிக்கும் உயிரிழப்பால் அரசு அதிர்ச்சி கர்நாடகத்தில் ஒரேநாளில் 146 பேர் கொரோனாவுக்கு பலி


அதிகரிக்கும் உயிரிழப்பால் அரசு அதிர்ச்சி கர்நாடகத்தில் ஒரேநாளில் 146 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 8 Sep 2020 8:07 PM GMT (Updated: 8 Sep 2020 8:07 PM GMT)

கர்நாடகத்தில் ஒரேநாளில் 146 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதிதாக 7,866 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 4 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 7,866 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 12 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 146 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,680 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 212 பேர், பல்லாரியில் 404 பேர், பெலகாவியில் 230 பேர், பெங்களூரு புறநகரில் 104 பேர், பெங்களூரு நகரில் 3,102 பேர், பீதரில் 52 பேர், சாம்ராஜ்நகரில் 42 பேர், சிக்பள்ளாப்பூரில் 82 பேர், சிக்கமகளூருவில் 162 பேர், சித்ரதுர்காவில் 23 பேர், தட்சிண கன்னடாவில் 374 பேர், தாவணகெரேயில் 240 பேர், தார்வாரில் 318 பேர், கதக்கில் 196 பேர், ஹாசனில் 219 பேர், ஹாவேரியில் 165 பேர், கலபுரகியில் 199 பேர், குடகில் 29 பேர், கோலாரில் 30 பேர், கொப்பலில் 269 பேர், மண்டியாவில் 273 பேர், மைசூருவில் 337 பேர், ராய்ச்சூரில் 209 பேர், ராமநகரில் 28 பேர், துமகூருவில் 153 பேர், உடுப்பியில் 250 பேர், உத்தரகன்னடாவில் 24 பேர், விஜயாப்புராவில் 61 பேர், யாதகிரியில் 79 பேர் உள்ளனர்.

பெங்களூருவில் 55 பேர்

கொரோனாவுக்கு பெங்களூருவில் 55 பேர், கொப்பல், சிவமொக்கா, துமகூரு, பல்லாரியில் 6 பேர், தார்வாரில் 8 பேர், உடுப்பியில் 7 பேர், மைசூருவில் 11 உள்பட மொத்தம் 146 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நேற்று 67 ஆயிரத்து 443 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஒரே நாளில் 7,803 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 573 பேர் ஆக அதிகரித்துள்ளது. 96 ஆயிரத்து 918 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 784 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தினமும் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை 150-ஐ நெருங்கி வருகிறது. கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும் இந்த உயிரிழப்பு கர்நாடக அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story