பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 Sep 2020 1:03 AM GMT (Updated: 15 Sep 2020 1:03 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேருக்கும், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,555 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் 137 பேர்

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து 1,399 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 349 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Next Story