மராட்டியத்தில் மேலும் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் மேலும் 21  ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Sep 2020 2:50 PM GMT (Updated: 23 Sep 2020 3:05 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மராட்டிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், தொற்று பரவல் குறைந்த பாடில்லை. இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 21,029-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 19,476-பேர் குணம் அடைந்த நிலையில், 479 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்துக்கு 63 ஆயிரத்து 799 ஆக உள்ளது. 9 லட்சத்து 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் 33,886- பேர் இதுவரை அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை  மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்தது.

Next Story