பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா அரியலூரில் 11 பேர் பாதிப்பு


பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா அரியலூரில் 11 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 11:19 PM GMT (Updated: 23 Sep 2020 11:19 PM GMT)

பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் அரியலூரில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் வட்டாரத்தில் 7 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 5 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 4 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 6 பேருக்கும் என மொத்தம் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 698 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து 1, 560 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 424 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரியலூர் நகராட்சி, திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், அரியலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 3 பேருக்கும், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 11 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவிற்கு பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 548 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். 2, 786 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 557 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story