கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், வங்க கடலில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 23-ந் தேதி மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல, மணமேல்குடி பகுதியில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், வங்க கடலில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 23-ந் தேதி மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல, மணமேல்குடி பகுதியில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story