செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 12:10 AM GMT (Updated: 1 Oct 2020 12:10 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 335 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 554-ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 170 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். .இதுவரை மாவட்டம் முழுவதும் 32 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 ஆயிரத்து 195 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,647 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 545 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 28, 34, 30, 41 வயதுடைய ஆண்கள், 50 வயது பெண், எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 22, 26 வயது ஆண்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 765 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 887 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 317 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒருவர் மட்டும் இறந்துள்ளார்.

Next Story