புதுச்சேரியில் இன்று 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,539 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 326 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 25,256 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 4,727 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
இதுகுறித்து அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-