பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டி


பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டி
x
தினத்தந்தி 11 Oct 2020 9:22 PM GMT (Updated: 11 Oct 2020 9:22 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட உள்ளதாக அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை,

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் வருகிற 28, நவம்பர் 3, 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட போவதாக சிவசேனா கட்சி அறிவித்து இருந்தது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகனும், சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட 22 பேர் ஈடுபடுவார்கள் எனவும் அக்கட்சி தெரிவித்து இருந்தது.

50 தொகுதிகள்

இந்தநிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பீகார் தேர்தலில் நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. சுமார் 50 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் சமூகநலப்பணிகளில் ஈடுபட்டார்களோ அங்கு வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம்” என்றார்.

பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா வில் அம்பு சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துவிட்டது. எனவே அந்த கட்சியினர் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் எக்காளம் இசைக்கருவியை மனிதன் ஊதும் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story