அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி - திருக்குவளையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி - திருக்குவளையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2020 12:45 PM GMT (Updated: 16 Oct 2020 1:30 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி திருக்குவளையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி,

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி முன்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தை கொண்டு செல்ல முயற்சிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் வேளாங்கண்ணி அருகே திருக்குவளையில் தி.மு.க. நாகை வடக்கு, தெற்கு, திருவாரூர், காரைக்கால் மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி அமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் மன்னைசோழராஜன் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வன்னன், திருவாரூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அமுதா சந்திரசேகரன், இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மகாஅலெக்சாண்டர், புதுச்சேரி மாநில இளைஞரணி மாநில அமைப்பாளர் முகமது ரிபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்தி, முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலா, டேனியல் சக்தியா மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

Next Story