திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 11:36 PM GMT (Updated: 21 Oct 2020 11:36 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 180 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 34 ஆயிரத்து 556 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,345 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 609 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 159 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்தது. 1,573 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஆண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், 55 வயதுடைய ஆண், இதேபோல் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஆண், 23 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 639 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தார்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்தது. 656 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story