சேலம் மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று 2 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2020 12:13 AM GMT (Updated: 26 Oct 2020 12:13 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் பலியானார்கள்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 185 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கொரோனா வைரசால் 148 பேர் பாதிக்கப்பட்டனர்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 72 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 9 பேர், வாழப்பாடியில் 7 பேர், ஆத்தூரில் 6 பேர், வீரபாண்டியில் 5 பேர், எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், சங்ககிரி, மேச்சேரி, காடையாம்பட்டி, சேலம் ஒன்றியம், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், தாரமங்கலம், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், நங்கவள்ளி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஏற்காடு, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

2 பேர் பலி

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 191 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலத்தை சேர்ந்த 85 வயதுடைய முதியவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 58 வயதுடைய ஆண் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

Next Story