தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 5:09 AM GMT (Updated: 29 Oct 2020 5:09 AM GMT)

தஞ்சை ரெயிலடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சொக்காரவி தலைமை தாங்கினார்.

தஞ்சாவூர்,

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீட்டை வரும் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சொக்காரவி தலைமை தாங்கினார். இதில் நில உரிமை மீட்பு மாநில துணை செயலாளர் வீரன் வெற்றி வேந்தன், தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, மற்றும் தி.க. பொதுசெயலாளர் ஜெயக்குமார், தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவகல்வியில் இட ஒதுக்கீட்டை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், ரகு, சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story