கர்நாடகத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கிறது சுகாதாரத்துறை தகவல்


கர்நாடகத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கிறது சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 6 Nov 2020 2:35 AM GMT (Updated: 6 Nov 2020 2:35 AM GMT)

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கிறது.

பெங்களூரு, 


கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 35 ஆயிரத்து 773 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 3,156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 38 ஆயிரத்து 929 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் வரை 11 ஆயிரத்து 281 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று புதிதாக 31 பேர் இறந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 312 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 5,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 503 ஆக உயர்ந்து உள்ளது. 33 ஆயிரத்து 95 பேர் சிகிச்சையில் உள்ளனர். 916 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 1 லட்சத்து 16 ஆயிரத்து 337 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 84 லட்சத்து 4 ஆயிரத்து 516 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

31 பேர் சாவு

புதிதாக பாகல்கோட்டையில் 15 பேர், பல்லாரியில் 46 பேர், பெலகாவியில் 39 பேர், பெங்களூரு புறநகரில் 53 பேர், பெங்களூரு நகரில் 1,627 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 26 பேர், சிக்பள்ளாப்பூரில் 104 பேர், சிக்கமகளூருவில் 50 பேர், சித்ரதுர்காவில் 29 பேர், தட்சிண கன்னடாவில் 83 பேர், தாவணகெரேயில் 54 பேர், தார்வாரில் 58 பேர், கதக்கில் 11 பேர், ஹாசனில் 138 பேர், ஹாவேரியில் 22 பேர், கலபுரகியில் 31 பேர், குடகில் 36 பேர், கோலாரில் 57 பேர், கொப்பலில் 8 பேர், மண்டியாவில் 103 பேர், மைசூருவில் 169 பேர், ராய்ச்சூரில் 10 பேர், ராமநகரில் 31 பேர், சிவமொக்காவில் 27 பேர், துமகூருவில் 181 பேர், உடுப்பியில் 47 பேர், உத்தர கன்னடாவில் 45 பேர், விஜயாப்புராவில் 36 பேர், யாதகிரியில் 14 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். பெங்களூரு நகரில் 9 பேர், மைசூருவில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 3 பேர் உள்பட 31 பேர் இறந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story