டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 7 Nov 2020 10:00 PM GMT (Updated: 8 Nov 2020 12:45 AM GMT)

திருவேங்கடம் வாகைக்குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலினார்.

திருவேங்கடம், 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தை அடுத்துள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 70), விவசாயி. இவர் நாலுவாசன்கோட்டை அருகே உள்ள மானாவாரி விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாலுவாசன்கோட்டை முதல் மகேந்திரவாடி செல்லும் சாலையில் சென்றபோது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்க ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே அந்தோணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் விரைந்து வந்தனர். அந்தோணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story