ஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் கவர்னர் கிரண்பெடி உத்தரவு


ஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2020 8:29 PM GMT (Updated: 11 Nov 2020 8:29 PM GMT)

ஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிட மக்களுக்கு அரசு சார்பில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். ஒரு நபருக்கு ரூ.500 வீதம் 1லட்சத்து 32 ஆயிரத்து 688 பேருக்கு மத்திய அரசின் விதிமுறைகள் படி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.6கோடியே 63லட்சம் செலுத்தப்படும்.

இதேபோல் புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் தர ரூ.3கோடியே 97லட்சத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விஜயன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் புதுவை அரசு சாலை போக்குவரத்துக் கழக செயல்பாட்டை மறுசீரமைக்க நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த இயக்குனர்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story