கள்ளக்காதலியின் மகனை அடித்து, உதைத்து சித்ரவதை உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் தொழிலாளி வெறிச்செயல்


கள்ளக்காதலியின் மகனை அடித்து, உதைத்து சித்ரவதை உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 Nov 2020 7:51 PM GMT (Updated: 12 Nov 2020 7:51 PM GMT)

ஹொலல்கெரே தாலுகாவில், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் மகனை தொழிலாளி ஒருவர் அடித்து, உதைத்து கொடுமைப்பத்திய சம்பவம் நடந்துள்ளது. மேலும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து அந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

சித்ரதுர்கா, 

சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகா தால்யா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பா. இவரது மனைவி நிங்கம்மா என்கிற சுருதி(வயது 24). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் நிங்கம்மாவுக்கு சித்ரதுர்கா தாலுகா கட்டிஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவமூர்த்தி(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் குறித்து ஜெயப்பாவுக்கு தெரியவந்தது. அவர் நிங்கம்மாவையும், சிவமூர்த்தியையும் எச்சரித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி கண்டித்தார். ஆனால் இருவரும் அதை கேட்கவில்லை. தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். மேலும் அடிக்கடி தனிமையிலும் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் ஜெயப்பாவுக்கும், நிங்கம்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இதையடுத்து நிங்கம்மா, தனது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார். அங்கு சிவமூர்த்தி, தனது கள்ளக்காதலி நிங்கம்மா மற்றும் அவரது மகனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் நிங்கம்மாவுக்கும், சிவமூர்த்திக்கும் இடையே நிங்கம்மாவின் மகன் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுவன், சிவமூர்த்தியை அப்பா என்று அழைக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவமூர்த்தி, நிங்கம்மாவின் மகனை ஆந்திராவில் உள்ள வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவமூர்த்தி, நிங்கம்மா மற்றும் அவரது மகனை அழைத்துக்கொண்டு கட்டிஹொசஹள்ளி கிராமத்திற்கே வந்துவிட்டார்.

சித்ரவதை

இந்த நிலையில் நிங்கம்மாவும், சிவமூர்த்தியும் உல்லாசமாக இருக்க சிறுவன் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவமூர்த்தி, சிறுவனை தினமும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். சிறுவனுக்கு சூடும் வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும் சித்ரஹள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசாரும், அதிகாரிகளும் சென்று சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, அவன் தன்னை சிவமூர்த்தி அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரிவித்தான். மேலும் தன்னை தனது தந்தை ஜெயப்பாவிடம் ஒப்படைத்து விடுமாறு கூறினான்.

விஷம் குடித்தார்

அதன்பேரில் போலீசார் ஜெயப்பாவிடம் சிறுவனை ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி சித்ரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவமூர்த்தியை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான சிவமூர்த்தி, கட்டிஹொசஹள்ளி கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கிராமத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இந்த நிலையில் போலீசார் நேற்று மதியம் சிவமூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story