அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல் கிரண்பெடி குற்றச்சாட்டு + "||" + Kiranpedi accused of violating rules in procuring goods for the state
அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல் கிரண்பெடி குற்றச்சாட்டு
அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி,
அரசு துறைகளுக்கு 400 பொருட்களை வாங்கியது தொடர்பான கோப்பு கவர்னர் மாளிகைக்கு வந்தது. அவசர தேவையில்லாத காலத்தில் இந்த பொருட்களை சிங்கிள் டெண்டர் (ஒரே ஒருவர் மட்டும் டெண்டரில் கலந்துகொண்டது) முறையில் வாங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கான கோப்பு தலைமை செயலாளருக்கோ, நிதித்துறைக்கோ அனுப்பப்படவில்லை. அந்த கோப்பு துறை அமைச்சரின் ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது விதிமுறை மீறல் ஆகும்.
மத்திய உள்துறைக்கு...
இதற்கு கவர்னரின் அலுவலகம் ஒப்புதல் அளிக்காது. அந்த கோப்பினை மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளேன். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். மேலும் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும்.
எனவே அதிகாரிகள் தங்கள் பணியின்போது கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை உங்கள் எதிர்காலம் தொடர்பாக கேள்வியை எழுப்பிவிடும். அதிகாரிகள் பயமின்றி யாருக்கும் சாதகமில்லாமல் செயல்படவேண்டும்.
‘ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்' என எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடிகளை காண்பிக்க சிலருக்கு ரூ.1 கோடி பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த என்னை குறிவைத்து அவதூறாக பேசுகிறார்கள் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.