டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Nov 2020 3:03 PM GMT (Updated: 22 Nov 2020 3:03 PM GMT)

காட்பாடி பகுதியில் டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை.

காட்பாடி,

காட்பாடி பகுதியில் டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று காட்பாடி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வணிக நோக்கிலான சிலிண்டர்களை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 20 கடைகளில் இருந்த 20 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் 20 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story