அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல் + "||" + All India Forward Bloc block road block demanding repeal of Essential Commodities Amendment Act
அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்
அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை கைவிடக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் விவசாய அணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.
பல்லடம் ஒன்றிய பொதுச்செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பிரகாஷ், சங்கர், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சாலை மறியல்
தொடர்ந்து ஊர்வலமாக வந்த அவர்கள் தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
கடலூரில் ஒரே இடத்தில் கூடிவிட்டு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்வீசி தாக்கி் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கலெக்டர் கிரண்குராலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற நாகை செல்வராசு எம்.பி. உள்பட 784 பேரை போலீசார் கைது செய்தனர்.