டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Dec 2020 2:38 AM GMT (Updated: 1 Dec 2020 2:38 AM GMT)

டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாகை, கிழையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பகு, நகர செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயத்தை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை தாக்கி, அடக்குமுறையில் ஈடுபட்ட மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல வேளாங் கண்ணி அருகே கீழையூர் கடைதெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 58 பேரை போலீசார் கைதுசெய்து அந்த பகுதியில் உள்ள ஒரு சமுதாய சேவை மையத்தில் தங்கவைத்தனர்.

Next Story