ஆறுமுகநேரி அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ஆறுமுகநேரி அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2020 11:12 PM GMT (Updated: 18 Dec 2020 11:12 PM GMT)

ஆறுமுகநேரி அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியை அடுத்த கந்தன்குடியிருப்பு மேல தெருவவைச் சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி. இவர்களுக்கு சதீஷ், சுடலை ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வெங்கட கிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. 

இவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் அவர் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அனைவரும் வீட்டில் தூங்கிய பின்னர் வெங்கடகிருஷ்ணன் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலையில் கண்விழித்த மனைவி சுந்தரி தன்னுடைய கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த வெங்கடகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story