திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 Jan 2021 2:23 AM GMT (Updated: 11 Jan 2021 2:23 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ளஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நரிக்குடிஎமனேஸ்வரர்கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

குடவாசல், வடுவூர்

இதேபோல் குடவாசல் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் பிரதோஷம் நடைபெற்றது. அப்போது நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள கைலாசநாதர், வடிவழகி அம்மன், நந்தியம் பெருமாளுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

பிரதோஷத்தையொட்டி மன்னார்குடியில் உள்ள அண்ணாமலைநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், காசிவிசுவநாதர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், நீலகண்டேஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Next Story