பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 Jan 2021 6:09 AM GMT (Updated: 11 Jan 2021 6:09 AM GMT)

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒடுவங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது 31). கூலித்தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியை சேர்ந்த 13 பேருடன் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர், தண்ணீர்பந்தல் பகுதிகளில் உள்ள பழனிசாமி என்பவரது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பிடுங்குவதற்காக சென்றனர்.

‌அப்போது மரவள்ளிக்கிழங்குகளை பிடுங்கிய உடன் அங்குள்ள கிணற்றில் 11 பேர் குளித்தனர். விக்னேஸ்வரன் மற்றும் 2 பேர் மட்டும் கிணற்றின் மேலே உள்ள தொட்டியில் குளிக்கச் சென்றனர். தொட்டியில் குளிப்பதற்காக மின்மோட்டாரை போடுவதற்காக விக்னேஸ்வரன் சென்றார்.

விசாரணை

அந்தசமயம் எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வினேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் விக்னேஸ்வரனின்‌ உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் குறித்து இறந்து போன விக்னேஸ்வரனின் அண்ணன் தெய்வசிகாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story