அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 12 Jan 2021 1:07 AM GMT (Updated: 12 Jan 2021 1:07 AM GMT)

அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் அய்யனார் கோவில் திடலில் மின்னொளி கபடி போட்டி கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில் திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பரிசு

போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல் பரிசை திருச்சி காவல்துறை அணியும், 2-வது பரிசை திருநெல்வேலி துர்க்காம்பிகை அணியும், 3-வது பரிசை கொடும்பாலூர் மூவர் ஐவர் அணியும், 4-வது பரிசை பெருமநாடு இணைந்தகைகள் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

கபடி போட்டியை காண புதுக்கோட்டை மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் வந்திருந்து கண்டுகளித்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

Next Story