மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலி


மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 13 Jan 2021 2:11 AM GMT (Updated: 13 Jan 2021 2:11 AM GMT)

மராட்டியத்தில் மேலும் 50 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 74 ஆயிரத்து 488 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 18 ஆயிரத்து 71 ஆயிரத்து 120 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 51 ஆயிரத்து 892 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 50 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 50 ஆயிரத்து 151 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து இருக்கிறார்கள்.

தாராவியில் 4 பேர்

தலைநகர் மும்பையில் புதிதாக 473 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 7 பேர் பலியாகி உள்ளனர். நகரில் இதுவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 799 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தாராவியில் புதிதாக 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நோய் பாதித்த 3 ஆயிரத்து 859 பேரில் 3 ஆயிரத்து 524 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது அங்கு 15 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story