குற்றாலம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த தொழிலாளி கைது


குற்றாலம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Jan 2021 5:35 AM GMT (Updated: 13 Jan 2021 5:35 AM GMT)

குற்றாலம் அருகே மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தென்காசி, 

குற்றாலம் அருகே உள்ள வல்லம் அண்ணா தெருவைச் சேர்ந்த பரமசிவன் மனைவி பாலம்மாள் (வயது 77). இவர் கடந்த 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அதே ஊரில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் குப்பை போட சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து பாலம்மாளின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். அப்போது பாலம்மாள் அந்தச் சங்கிலியை பிடித்துக் கொள்ளவே சங்கிலி அறுந்து 7 கிராம் சங்கிலி பாலம்மாமாளின் கையில் சிக்கிக்கொண்டது. மீதி 9 கிராம் சங்கிலியை மர்ம நபர் கொண்டு சென்றுவிட்டார்.

தொழிலாளி கைது

இதுகுறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அதே ஊரில் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 41) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டன் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பறித்துச் சென்ற தங்கச் சங்கிலி மற்றும் இதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மணிகண்டன் செங்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

அதிகாலையில் நோட்டம்

கைது செய்யப்பட்ட மணிகண்டன் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்தவர் தினமும் பாலம்மாள் அதிகாலையில் குப்பை போட செல்வதை நோட்டமிட்டு 4-ம் தேதி நகையை பறித்துள்ளார். பின்னர் அவர் திருப்பூருக்கு சென்று விட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது பிடிபட்டுள்ளார்.

Next Story