தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கொட்டும் மழையிலும் திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
தூத்துக்குடி,
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மீண்டும் மழைநீர் ரோடுகளில் தேங்கத் தொடங்கியது. ஆங்காங்கே பொதுமக்களுக்கு இடையூறாக தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார்களை பயன்படுத்தி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. அதே போன்று தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். நேற்று மதியத்துக்கு பிறகு சிறிது நேரம் சாரல் இல்லாமல் லேசான வெயில் அடித்தது. மாலை 5 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கருவிகளுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.