மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின


மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 14 Jan 2021 3:50 AM GMT (Updated: 14 Jan 2021 3:50 AM GMT)

மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட சன்னதி புதுக்குளம், படக்குளம், மானாமதுரை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைத்து நாற்றாக வளர்ந்துவிட்டன.

பொதுவாக மானாமதுரை அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் விவசாயிகள் வருடம் வருடம் ஒவ்வொரு ஆடி மாதத்திலும் 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் ரகங்களை விதைக்க தொடங்குவார்கள்.

அதேபோல் இந்த வருடமும் விதைத்தனர். பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் முளைத்து நாற்றாக மாறிவிட்டன. கண்மாய்களில் இருந்த தண்ணீர் மறுகால் பாய்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெற் கதிர்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன.

கோரிக்கை

ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் முதல் செலவு செய் துள்ளோம். தகுந்த நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி அமுதா கூறியதாவது:- வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்துள்ளோம். தொடர் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story