8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் + "||" + Farmers affected by the 8-lane project, struggle to build a black flag in their homes
8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் பொங்கல் திருநாளை கருப்பு தினமாக அனுசரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி,
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மல்லூரை அடுத்துள்ள நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பாரப்பட்டி அடுத்துள்ள கூமாங்காடு பகுதியில் ஒன்று திரண்டு கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து கைவிடவேண்டும். இயற்கை மற்றும் கனிம வளங்களை அழிக்க விடமாட்டோம் என கூறி கோஷம் எழுப்பினர்.
கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிடாமல் இருப்பதாக கூறி அதற்கு பொங்கல் திருநாளை துக்க தினமாக கடைபிடித்து அவர்களது தோட்டம் மற்றும் வீடுகளின் முன்பகுதியில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
8 வழிச்சாலை போடுவதால் எங்களது வாழ்வாதாரம் முழுதும் அழிந்துவிடும். இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை துக்க நாளாக கடைபிடித்து வருவதாகவும், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையாத்தெரு விரிவாக்கம் பகுதியில் அஸ்வின்நகர் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் சூழந்துள்ளது.