மராட்டியத்தில் மேலும் 2,779 பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் மேலும் 2,779 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2021 9:19 PM GMT (Updated: 22 Jan 2021 9:19 PM GMT)

மராட்டியத்தில் மேலும் 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 779 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 3 ஆயிரத்து 657 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் இதுவரை 19 லட்சத்து 6 ஆயிரத்து 827 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 3 ஆயிரத்து 419 பேர் குணமாகினர்.

தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 926 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 50 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை 50 ஆயிரத்து 684 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனா்.

மும்பை நிலவரம்

தலைநகர் மும்பையில் புதிதாக 482 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 5 ஆயிரத்து 131 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மேலும் 9 பேர் பலியானதால் நகரில் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 285 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போது நகரில் 6 ஆயிரத்து 642 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story