பவானிசாகர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்.


பவானிசாகர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
x
தினத்தந்தி 23 Jan 2021 10:32 PM GMT (Updated: 23 Jan 2021 10:32 PM GMT)

பவானிசாகர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பவானிசாகர்
பவானிசாகர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு
சத்தியமங்கலம் அடுத்துள்ள எரங்காட்டூர் பகுதியிலிருந்து முடுக்கன்துறை வரை செல்லும் சாலை விரிவாக்கம் செய்து தார் சாலை அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் பல மாதங்களாக பணிகள் நடைபெறாமல் காலதாமதமானது. பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து சாலையை அகலப்படுத்தி பின்பு எரங்காட்டூர் சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். 
அகற்றம் 
இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளின் முன்பகுதி பொக்லைன் மூலம் இடித்து பணி நடைபெற்றது. 
இந்த பணியின் போது தாளவாடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்தனர்.  


Next Story