நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று


நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 24 Jan 2021 12:12 AM GMT (Updated: 24 Jan 2021 12:12 AM GMT)

நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி 59 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 213 பேர் பலியாகி உள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 389 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 8 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 47 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 158 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 240 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 16 ஆயிரத்து 54 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 45 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story