அந்தியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.


அந்தியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
x
தினத்தந்தி 26 Jan 2021 1:28 AM GMT (Updated: 26 Jan 2021 1:28 AM GMT)

அந்தியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர்
அந்தியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடையூறு
அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் புதிதாக டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
அந்த பகுதியில் குடியிருப்புகள், மருத்துவமனை மற்றும் பள்ளிகள் உள்ளதால் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையூறாக இருக்கும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  
ஆர்ப்பாட்டம்
அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் குணசேகரன்,  விவசாய தொழிலாளர்கள் பிரிவு மாரிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராமன், ஒன்றிய செயலாளர் ரகுபதி, தி.மு.க ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராசு மற்றும் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Next Story