திருத்தணி அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு


திருத்தணி அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2021 4:15 AM GMT (Updated: 29 Jan 2021 4:15 AM GMT)

திருத்தணி அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை கிராமம் ரேஷன் கடை அருகே வசித்து வருபவர் பழனி (வயது58). மர வியாபாரி. இவரது மனைவி கல்யாணி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருத்தணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

அதன் பிறகு அவர்கள் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

நகை பறிப்பு

வீட்டின் முன்புறம் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் கல்யாணி அணிந்து இருந்த 3 தங்கச்சங்கிலிகளை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். பறிகொடுத்த தங்க நகைகளின் எடை 15 பவுன் ஆகும்.

இதுகுறித்து பழனி திருத்தணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story