வேலூர், 134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை


வேலூர், 134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
x
தினத்தந்தி 2 Feb 2021 2:32 PM GMT (Updated: 2 Feb 2021 2:33 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 134 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு தலைமை தாங்கினார். இயன்முறை பயிற்சியாளர் பார்த்தசாரதி, பேச்சு பயிற்சியாளர் காயத்ரி சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ துறைகளை சேர்ந்த டாக்டர்கள் முத்து, குமரேசன், சதீஷ், ரேகா, மீனா, சிவாஜிராவ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

134 பேருக்கு தேசிய அடையாள அட்டை

அதில், தகுதியுடைய 134 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. மேலும் விண்ணப்பித்த சிலருக்கு ஊனத்தின் தன்மை குறித்து கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும்.

 40 சதவீதத்துக்கும் மேல் காணப்பட்டால் அவர்களுக்கு அடுத்த மாதம் (மார்ச்) நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story