முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x
கண்டன ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 3 Feb 2021 12:53 AM GMT (Updated: 3 Feb 2021 12:58 AM GMT)

முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் முகம்மது நபியை பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமன் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லிம் அமைப்பினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமன் என்பவருக்கு எதிராக பாதகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கீரமங்கலம், மேற்பனைக்காடு, காசிம்புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதி சுற்றுவட்டார கிராம ஜமாத்தார்கள் இணைந்து கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே முஸ்லிம்களை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டனர்.

Next Story