ஈரோடு கொல்லம்பாளையத்தில் கட்டப்பட்ட 192 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


ஈரோடு கொல்லம்பாளையத்தில் கட்டப்பட்ட 192 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 5 Feb 2021 12:34 AM GMT (Updated: 5 Feb 2021 12:34 AM GMT)

ஈரோடு கொல்லம்பாளையத்தில் கட்டப்பட்டு உள்ள 192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

192 வீடுகள்
ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. ரூ.17 கோடியே 28 லட்சம் செலவில் 192 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் பெரும்பள்ளம் ஓடை கள்ளியங்காடு ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசித்து வந்த 101 குடிசைவாசிகள், அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த 45 குடிசைவாசிகள், ஜீவானந்தம் ரோடு பகுதியை சேர்ந்த 3 குடிசை வாசிகள், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கந்தையன் தோட்டம் பகுதிகளில் வசித்து வந்த 43 குடிசைவாசிகள் என 192 குடிசைவாசிகளுக்கு இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இனிப்பு
வீடுகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. ஹால், படுக்கை அறை, சமையல் அறை, குளியல்அறை-கழிப்பறை உள்ளன. குடியிருப்பு பகுதி முழுமையும் கான்கிரீட் ரோடு, மழைநீர் வடிகால். கழிவுநீர் அகற்றும் வசதி, தண்ணீர் தொட்டி, பூங்கா, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திறப்பு    விழாவையொட்டி கொல்லம்பாளையம்   எம்.ஜி.ஆர். நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கினார். சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியிருப்பினை திறந்து வைத்ததும், ஈரோட்டில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Next Story