கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணப்பாறை அருகே உள்ள தவிட்டுப்பட்டியை சேர்ந்தவர் அழகன். இவருடைய மனைவி நித்யா(வயது 23). நேற்று மாலை இந்த தம்பதி நித்யாவின் பெற்றோர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மதுரை நெடுஞ்சாலையில் மேனிவயல் சாய்பாபா கோவில் அருகே வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள், நித்யாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story