தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வருகை
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வருகை வருகை புரிகிறார்
கரூர்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். இதனையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அரவக்குறிச்சி - புங்கம்பாடி கார்னரில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பள்ளபட்டி, சின்னதாராபுரம் பஸ்நிலையம், க.பரமத்தி கடைவீதி, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா, கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் ராயனூரில் இளைஞர் அணி கூட்டமும், மாலை 6 மணியளவில் சர்ச் கார்னர் சி.எஸ்.ஐ. விளையாட்டு மைதானத்தில் தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்திலும் பங்கேற்கிறார். தொடர்ந்து பஞ்சமாதேவி, வெங்கமேடு அண்ணாசிலை, வடிவேல்நகர் ஈரோடு சாலை ஆகிய பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story